Sunday 9 August 2020

வாழ்க்கை எனும் பாதை....

 👣வாழ்க்கை எனும் பாதை....



படித்ததில் பகிர்ந்தது.

வாழ்க்கை பாதை 

எல்லோருக்கும் 

ஒரே மாதிரியானவை 

அல்ல,


சிலர்

மலர்கள்  மேல் 

நடக்க கூடும்.

சிலர் 

முட்கள் மேல் 

நடக்க கூடும் .

சிலர்

மலர்களிலும்,

முட்களிலும் 

நடக்க கூடும் .


மலர்களில் நடந்த 

போதிலும் 

சில வேளைகளில் 

அவர்களுக்கும் 

கால்கள் வலிக்க கூடும்.

முட்கள் என்றால் ,

உன் அடுத்த அடியில் ,

கவனம் கூடும்.


மலர்களும் ,முட்களும் 

என்றால் ,

எங்கே எப்படி 

நடக்க வேண்டும் என்ற 

தெளிவு கூடும்.


செல்லும் பாதையில்  

பேச்சு துணைக்கு 

சிலர் வர கூடும் .

பேசாமலும் சிலரை 

கடக்க கூடும் .

வழி காட்ட சிலர் 

வர கூடும்.

தவறான வழியை காட்டவும் 

சிலர் வர கூடும்.


விழும் போது தூக்கி விட 

சிலர் வர கூடும் .

விழும் போது 

சிரிப்பதற்கும் 

சிலர் வர கூடும்.

முந்தி நடக்கையில் 

முதுகுக்கு பின்னால் 

தட்டி குடுக்க 

சிலர் வர கூடும் .

போக விட்டு 

புறம் பேச 

சிலர் வர கூடும்.


இளைப்பாறும் மரமாய்

சிலர் நிழல் குடுக்க கூடும் .

உன் நிழல் மட்டுமே 

துணை என்ற 

நிலையும் வர கூடும்.

வழி(லி) எதுவாயினும் ,

காணும் மனிதர் யாராயினும் 

பாதை முடியும் வரை 

பயணித்தே ஆக வேண்டும் .


இடையில் முடங்கி விடாதே ,

இயலாமல் முடித்து விடாதே .

முடியும் வரை கால்களை 

கொண்டு நடந்து விடு 

முடிந்தால் ஓடி விடு .

முடியாமல் முடங்கும் 

போது ,

(தன்னம்பிக்)கை யை கொண்டு 

ஒரு அடியேனும் 

முன்னுக்கு சென்று விடு....

Friday 7 August 2020

நம்பிக்கை

 நம்பிக்கை எத்தனை வலிமையான சொல் 

ஆனால் இந்த நம்பி நம்பியே கெட்டு போனேன், 

நம்பி கழுத்தை அறுத்துவிட்டான்

நம்பி ஏமாற்ற பட்டேன்

நம்பிக்கை துரோகம்

இப்படி நம்பிக்கை மேல் பலவகை குற்றசாட்டுகளால் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நம்பிக்கை மீது அவ நம்பிக்கை வந்து போகும் இது சகஜம் இந்த வகையான நம்பிக்கை என்பது தனிமனிதர் மீதானது.அது அது அவர் அவர் மனசாட்சிக்கு உட்பட்டது.நம்மை நம்பி வருவோருக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்ற கூடாது. அதிகபடியான நம்பிக்கை கொடுப்பதும் ஒருவகை துரோகம் தான்.எதுவாக இருந்தாலும் யதார்த்த சூழலை அனுபவ ரீதியாக புரிய வைப்பதே சிறப்பு.யாரோ சொன்னதை கேட்டு அதை பிறர் மீது தன் சொந்த அனுபவம் இல்லாமல் நம்பிக்கை ஊட்டி செயல் படுத்த சொல்வதும் ஒருவகையில் நம்பிக்கை துரோகம் தான்.

நான் சொல்ல வந்த நம்பிக்கை எது எனில் பிரபஞ்ச பேராற்றலின் மீதான நம்பிக்கை.நம்மை படைத்த படைத்தலின் மீதான நம்பிக்கை இது. இதை நாம் சராசரி வாழ்க்கையில் சந்தித்த அவநம்பிக்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டியதே இல்லை.

பிரபஞ்ச பேராற்றலை ஈர்க்க வேண்டும் என்றால் உங்கள் அவநம்பிக்கைகளை வெளியேற்றி விட்டு முழு ஈடுபாடு கொண்டு நாம் பிரபஞ்சத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டு நன்றி கலந்த ரசனையோடு ஓம் எனும் பிரணவ ஒலியோடு அண்ட வெளியில் உங்கள் நல்ல எண்ணங்களை பரவ விடுங்கள்.

அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்களை உங்களால் காண முடியும்.

இதை நீங்கள் கடைபிடிக்க தொடங்கு போது எதிர்மறையான எண்ணம் வந்து போக வாய்ப்பு அதிகம் எனவே தான் தனிமனித நம்பிக்கை மீதான ஏமாற்றங்களை இங்கே நினைத்து கூட பார்க்காதீங்க.கோயிலுக்கு போகிறீங்க சாமியை நம்பிக்கை கொண்டு தானே வணங்கி வருகிறோம்.அதே எண்ணத்தை மட்டும் இங்கே கொண்டு வாங்க 

எல்லா நன்மைகளும் உண்டாகும்

மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்.🌹

வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்

 வெற்றிக்கு ஒரு புத்தகம் – ஐந்து வில்லன்கள்


ஆட்டிட்யூட்! இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்கிறோம். பையன் நல்ல திறமைசாலிதான் ஆனா ஆட்டிட்யூட் சரியில்லையே! என்கிறார்கள்.அதென்ன ஆட்டிட்யூட்?தமிழில் இதனை மனப்பாங்கு என்கிறார்கள். அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழ்கிற விஷயங்களை நமது மனம் எப்படி எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினை (ரியாக்ட்) செய்கிறது இவற்றின் தொகுப்பைத்தான் ஆட்டிட்யூட் (Attitude) என்கிறோம்.சுமாரான திறமை கொண்டவர்கள்கூட, தங்களது மனப்போக்கைப் பொருத்தமானவகையில் அமைத்துக்கொண்டால் மிகப் பெரிய அளவு முன்னேறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.அதேசமயம், இதற்கு நேர் எதிராக, பிரமாதமான திறமைசாலிகள் நல்ல ஆட்டிட்யூட் இல்லாமல் தடுமாறுவதும் உண்டு. இந்த ஆட்டிட்யூட்டை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து தி டிஃப்ரன்ஸ் மேக்கர் (The Difference Maker) என்ற புத்தகம் வந்திருக்கிறது அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜான் சி மேக்ஸ்வல்.நல்ல ஆர்ட்டிட்யூட் வளர்த்துக்கொள்வது அத்தனை சிரமமில்லை. ஆனால், நீங்கள் அப்படி முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள் என்று மாக்ஸ்வெல் எச்சரிக்கிறார். நாம் இந்த ஐந்து பேரையும் புரிந்துகொண்டு முறியடிக்கப் பழகிவிட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன செய்தாலும் பப்பு வேகாது, நாம்தான் ஜெயிப்போம்!மார்ஸ்வெல் சொல்லும் அந்த 5 வில்லன்கள்: ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி.இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை ஜெயிக்கக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. ஊக்கமின்மை:*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள், ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக்கொள்ளுங்கள்.*சரியான நபர்களோடு பழகுங்கள். நீங்கள் செய்கிற எதுவும் உருப்படாது என்று சொல்கிறவர்களோடு எந்நேரமும் வளையவந்தால், உங்களைப் பற்றி உங்களுக்கே அவநம்பிக்கைதான் தோன்றும்.*நெகட்டிவ் வார்த்தைகளைத் தவிர்த்துவிடுங்கள், உங்களுக்கே தெரியாமல் அவை ஏற்படுத்தும் அதிர்வுகள் உங்களைச் சோர்வாக்கும், முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

2. மாற்றம்:* நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்துகொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.* மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனத்தில் வையுங்கள்.* அதேசமயம், சில விஷயங்களை எப்போதும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அந்தக் கொள்கைகளில் உறுதியாக இருங்கள்.

3. பிரச்னைகள்:*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும், தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்துவையுங்கள்.*பல சமயங்களில், நாம் பிரச்னை என்று நினைப்பது மேலோட்டமான ஒரு விஷயம், நிஜப் பிரச்னை ஆழத்தில் ஒளிந்திருக்கும். அதைக் கண்டுபிடியுங்கள்.*அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கிறத, தேடிப் பிடித்து பயன்படுத்துங்கள்.

4. பயம்:* பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக்கொள்கிறவன் கோழை அல்ல, வீரன். அவனால்தான் அந்தப் பயத்தை வெல்லமுடியும்.*உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.* நேற்று, நாளை ஆகியவற்றைவிட இன்றுதான் மிக முக்கியம், அதை மறக்காமல் இருந்தால் எந்தப் பயமும் உங்களை எதுவும் செய்யாது.

5. தோல்வி:* சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.*உங்கள் மொழியையே மாற்றுங்கள். ச்சே இப்படி நடந்திருக்கலாம். என்பதைவிட அடுத்தமுறை இப்படிச் செய்வேன் என்பது பெட்டர்.* சில விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியும், மற்ற பல நம் கையில் இல்லை. அவற்றை மாற்ற நினைத்துப் பிரயோஜனம் இல்லை, நம்மால் முடிந்ததைமட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.